கவிதையின் காதலன் வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்... படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க

டிவிட்டரில்

நான் காதலித்த கவிதைகள்..

அற்புதமான
காதலை மட்டுமல்ல..
அதை உன்னிடம்
சொல்ல முடியாத
அதி அற்புதமான
மௌனத்தையும்!
நீதான் எனக்கு தந்தாய்..

++++++++++++++++++++++++++++++++++

ஒரே ஒரு முறைதான்
எனினும்
உன் உன்னத நிழல்
என்மீது பட்ட போதுதான்
நான் ஒளியூட்டப்பட்டு கவிஞனானேன்

++++++++++++++++++++++++++++++++++

எத்தனை முறை
அழுதும்
கரையவில்லை
கண்களில்
பதிந்த உன் முகம்

++++++++++++++++++++++++++++++++++

உன் கண்மையைக் கொடு;
மைப்போட்டு பார்க்கலாம்
உன்னில்
தொலைந்த
என்னிதயத்தை!

++++++++++++++++++++++++++++++++++

விழி மொழிகளையே இன்னும் மொழிபெயர்த்து
முடியவில்லை
அதற்க்குள் ஆரம்பித்துவிட்டாய் விரல் மொழி பேச!

++++++++++++++++++++++++++++++++++

உன் நெற்றிமுடி தொட்டு வழியும் அழகிற்காகவே அதிகப்படியான காதல் மழையிடம்...

++++++++++++++++++++++++++++++++++

குளத்தில் குளித்து
மெல்லக்கரையேறி, மரங்களுக்குள் ஒளிந்துகொண்டே உடைமாற்றுகிறது நிலா.

++++++++++++++++++++++++++++++++++

நீ சென்றாலும்
உன் மீதான
என் காதல்
நிகழும்
நொடிக்கு நொடி"

++++++++++++++++++++++++++++++++++

நான் செய்வதையே திரும்ப செய்து என்னை சிரிக்க வைக்கும் அழகிய காதல்
கண்ணாடி
கவிதை நீ

++++++++++++++++++++++++++++++++++

நீ பூக்கடை
கவிழ்த்து போட்டால் கொட்டுவது
பூக்கள் அல்ல
சில தோட்டங்கள்

++++++++++++++++++++++++++++++++++

தனக்குத்தானே முத்தமிட்டுக்
கொள்கின்றன
உன் உதடுகள்...
நீ பேசும்போது.

++++++++++++++++++++++++++++++++++


சின்ன சின்ன கோபமும் சுட்டெரிக்கிறதே என்னை..
நீயென்ன
அக்னி நட்சத்திரத்தில்
பிறந்தவளா..

++++++++++++++++++++++++++++++++++

ஒரு வண்ணத்துப் பூச்சி உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது..
"ஏன் இந்தப் பூ
நகர்ந்து கொண்டே இருக்கிறது?" என்று..

++++++++++++++++++++++++++++++++++

இந்த காதல் நீ தந்தது
அதனால் தான்
காதலை பிடிக்கும்
உன்னைப் போலவே!

++++++++++++++++++++++++++++++++++

என் கவிதைகள் ஒவ்வொன்றும்
நாளை காவியம் ஆகலாம்..
ஏனெனில்
உன்னைப்பற்றி எழுதியதினால் !

++++++++++++++++++++++++++++++++++

உன் நிறம் கண்டு வெட்கப்படுகிறது மருதாணிச்செடி

++++++++++++++++++++++++++++++++++

இத்தனை ஆழமாய் என்னுள் நீ இருப்பது நீ இல்லாதபோதுதான் எனக்கு புரிகிறது.

++++++++++++++++++++++++++++++++++

பூக்களைப் பூப்பதைத் தாண்டி வேறென்ன இருக்கிறது பூச்செடிக்கு. அப்படித்தான் உன்னைக் காதலிப்பதைத் தாண்டி வேறெதுவும் இல்லை எனக்கு.

++++++++++++++++++++++++++++++++++

வார்த்தைகள் வலிமையானவை என்று யார் சொன்னது.
எந்த வார்த்தைக்கும் வலிமை இல்லை
உன் கண்களுக்கு முன்னால்.

++++++++++++++++++++++++++++++++++

நீ ஒன்றுமே செய்ய வேண்டாம்.
சம்மதம் மட்டும் சொல்....
உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்.

++++++++++++++++++++++++++++++++++

ஒரு பூங்காவில் உன்னோடு சேர்ந்து அமர்ந்திருப்பதும்... உன்னை
நினைத்தபடி
தனியே அமர்ந்திருப்பதும் ஒன்றுதான் எனக்கு.

++++++++++++++++++++++++++++++++++

நான் ரசித்த
முதல் கவிதை
நீ...!

++++++++++++++++++++++++++++++++++

என் இதயத்தைக் கேட்காதே.
அதை உன்னிடம் கொடுத்துவிட்டு
வேறு எதைக்
கொண்டு
நான் உன்னைக் காதலிப்பது..

++++++++++++++++++++++++++++++++++

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக