கவிதையின் காதலன் வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்... படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க

டிவிட்டரில்

கவிதை தொகுப்பின் சில துளிகள் உங்கள் பார்வைக்காக..

நண்பர்களே
எனது முதல் கவிதை தொகுப்பு "கவிதையின் காதலன்" விரைவில் வெளிவரவிருக்கின்றது.
கவிதை தொகுப்பிலிருந்து சில கவிதை துளிகள் உங்கள் பார்வைக்காக..
உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்க படுகின்றது..
படிச்சுட்டு உங்க கமென்ட்ஸ சொல்லுங்க..

1)ஓராயிரம் வருடங்கள்
தவமிருந்து
உன்னை காதலிக்கும்
வரத்தை பெற்றவன் நான்


2)அவள் சென்ற பாதையில்
பார்த்து செல்லுங்கள்
கீழே கிடக்கலாம்
ஏதாவது ஒரு அப்பாவி இளைஞனின் இதயம்


3)காதலன்
கவிஞன்
கிறுக்கன்
எல்லா புகழும் அவளுக்கே


4)அவள் இதயம் என்னும்
இருட்டறையில்
படிக்காமலே தொலைந்துபோன
புத்தகம்தான்
என் காதல்

5)என் முகம் வாடினால்
அவள் கண்கள் கலங்கும்
அவள் கண்கலங்க கூடாது
என்ற கவலையிலே
என் முகம் வாடிக் கிடக்கும்..


மறக்காம உங்க கருத்துக்கள சொல்லுங்க எனக்கு உதவியா இருக்கும்

13 கருத்துகள்:

  1. முதல் பார்வையில் பிடித்திருக்கிறது.. short and sweet.. but looks kind of monotonous..

    பதிலளிநீக்கு
  2. நல்ல தொடக்கம் மேன்மேலும் சிறந்த பதிவுகளை எழுதுங்கள்.... வாழ்த்துக்கள் :))

    பதிலளிநீக்கு
  3. ஏய்
    இளைஞனே!
    நமக்குத்தான்
    துயில் எழுப்புவதற்கு
    சேவல்
    கடிகாரம் எல்லாம்......
    அந்த சூரியனுக்கேது?
    கண்களில் முயற்சி
    கைகளில்
    நம்பிக்கை
    மனதில்
    இலட்சியம்
    வேண்டும்!
    போலி வே~ங்களை
    பொய்
    வார்த்தைகளின்
    சாயத்தைக் கிழி!
    உன் பாதை
    வழியில்
    இனி
    திசையெல்லாம்
    கிழக்காய்
    இருக்க......
    வேண்டும்
    தலை குனியாதே?
    தலை நிமிர்
    கை குலுக்கி
    வாழ வழியுண்டு.
    ..அன்பு....நண்பன் நந்தன்.......

    பதிலளிநீக்கு
  4. Arumai Vivek ...Congrats ...Wish U All the Best ...ABDUL KHADAR (KARAIKAL)

    பதிலளிநீக்கு
  5. மிகவும் அருமை..வாழ்த்துக்கள்.........
    நானும் கவிதை எழுதி இருக்கிறேன்......
    பாருங்கள் எனது வலைதள்த்தில்......
    www.sjmanickam.blogspot.com

    பதிலளிநீக்கு
  6. மிகவும் அருமை..வாழ்த்துக்கள்.........www.rishvan.com

    பதிலளிநீக்கு
  7. வரிக்கு வரி காதல் ரசம் ததும்புகிறது வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு